Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


Showing posts with label 2011 மீலாது. Show all posts
Showing posts with label 2011 மீலாது. Show all posts

இந்த வருட மீலாது (2011) 2

ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப:192 )




வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன். .....................................................
பிப்ரவரி 26 - 2011 சனிக்கிழமை பரங்கிப்பேட்டை ஷாதிமஹாலில் "சீரத்துன்நபி மீலாது மாநாடு" நடந்தது. மீலாது கமிட்டி இதை நடத்தியது.
வந்திருந்த பேச்சாளர்கள் யாரும் "நாங்கள் குர்ஆன் ஹதீஸோடு நெருக்கமான தொடர்புடையவர்கள் கிடையாது" என்பதை நிரூபித்தே தனது பேச்சை துவங்கி முடித்தார்கள். தமிழ் புலவர்களின் "பா"க்களும் கவிதைகளும் நிறைந்தன.
நபியின் புனித உடலை சுமந்துள்ள மண் அர்ஷைவிட சிறந்தது என்று நாகூசாமல் நஞ்சோடு பேசினார்கள்.
மீரான் என்ற பேச்சாளர் - ஆன்மீக வாழ்க்கை என்ற பெயரில் "துறவரத்தை ஊக்குவித்து? அவ்லியாக்களெல்லாம் துறவரம் பூண்டவர்கள் என்றெல்லாம் அளந்தார். இப்னு அரபி தனது தவ வலிமையால் இரண்டாம் வானம் சென்றுள்ளார்கள் என்றெல்லாம் ஜாஹிலியத்தை விதைத்து விட்டு சென்றார்.
அவ்லியாக்களின் பொருட்டால் தான் அல்லாஹ் இந்த ஊரை சிறப்பாக்கி வைத்துள்ளான் என்று ஆவூர் அப்துஷ் ஷகூர் அவர்கள் கதை பாடினார்.
குர்ஆன் ஹதீஸ் ஆங்காங்கே சில எடுத்துக் காட்டப்பட்டன. அவ்வளவுதான் இதுதான் மீலாது மாநாடு.
இப்னு அரபி என்ற வழிகெட்ட சூபிக் கொள்கைக்காரரின் கொள்கையை ஆரம்பத்தில் சுட்டிக் காட்டியுள்ளோம்.


 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga