மென்மேலும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
| குர்ஆன் - கருவியல் - அறிவியல் | 0 |
ஒற்றை உயிரணு மனித சைகோட்டானது, சக்தி வாய்ந்த ஒரு செய்கையின் மூலம் நூறு ட்ரில்லியன் உயிரணுக்களைக் கொண்ட மனித உருவாக வடிவெடுப்பது இயற்கையில் நடக்கும் அற்புதங்களிலேயே குறிப்பிடத்தக்கதாகும். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி அன்றாட நடவடிக்கைகளை செய்யும் வளர்ச்சியடைந்த மனித உடல் கருவிலேயே நிலைப்படுத்தப்படுகிறது - அதுவும் பிறப்பிற்கு வெகு காலத்திற்கு முன்னமே!
குர்ஆன் கருவியலைப் பற்றிப் பேசுகின்றது!
وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
நிச்சயமாக (இறைவனாகிய) அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன்: 71:14)
கருவறை செல்லும் உயிரணு உடனடி குழந்தையாக மாறுகின்றது, இல்லை, இல்லை கருமுட்டைதான் குழந்தையாக மாறுகின்றது என்ற முந்தையகால விஞ்ஞான நம்பிக்கைகள் முற்றாகப் புறக்கணித்து கருவறையில் ஒரு நிலை மட்டும் என்ற நிலை எந்த சந்தர்ப்பத்திலும் இல்லை. கருவுருவாக்கம் என்பது பல நிலைகளை கொண்டதாகும் என்ற நவீன விஞ்ஞான உண்மையை அன்று முதலே உலகிற்கு அறிவித்து நிற்கிறது குர்ஆன்.
பல நிலை என்பதன் பொருள் என்ன? வியக்க வைக்கும் இன்றைய கருவறை விஞ்ஞானத்தை பல நிலை என்ற குத்து மதிப்பான வார்த்தையைப் போட்டு சொல்லி விட்டால் அது விஞ்ஞான அறிவிப்பாகுமா? என்று அறிவார்ந்த வாதம்(?) எவராவது புரிந்தால் இன்னும் ஆழமாக கருவுருவாக்கம் பற்றி அவரோடு பேசுகிறது குர்ஆன்.
கருவளர்ச்சி என்பது பல நிலைகளாக மாறி கடைசியாக வேறொரு படைப்பாக அது தீர்மானிக்கப்படுகின்றது.
பல நிலைகள் என்னென்ன? என்பதை வரிசைப்படுத்துகின்றது குர்ஆன்
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
நாம் மனிதனை களிமண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ
பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம்.
வியக்க வைக்கும் குர்ஆன் அறிவியலை வீடியோ காட்சிகளுடன் தொடர்ந்துப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்
| பெற்றோர் மாநாடு (பிப்ரவரி - 7) | 2 |
ஸலாம்.
பிப்ரவரி 7ம் தேதி நடந்து முடிந்த "பெற்றோர்கள் மாநாடு" வீடியோ பதிவு முதல் பகுதி.
கஸ்ஸாலி இமாமின் இஹ்யாவுல் உலூமித்தீன் புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தை (அல்லாஹ்வை நினைவுக்கூர்வதற்கென்று நபி(ஸல்) நிறைய திக்ருகளை சொல்லிக் கொடுத்திருக்கும் போது இஹ்யாவிலிருந்து எவரோ சொன்ன திக்ர் தேவையா என்பதை பேச்சாளர் யோசித்திருக்க வேண்டும்) தவிர மற்ற உரைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.
பெரிய குறைப்பாடுகள் என்று சொல்லும் படி எதுவும் இல்லையென்றாலும் பேச்சாளர்கள் உரை சப்தத்தை விட பெண்கள் தரப்பிலிருந்து பேச்சு சலசலப்பு தொடர்ந்து வந்தன. (வருபவர்களின் முழு கவனமும் பேச்சாளர்களின் பக்கம் இருக்கும் படி ஒளி, ஒலி அமைப்பு, இதர ஏற்பாடுகள் செய்யப்படுவது மிக அவசியமாகும்).
மிக நெடிய திரைப் போட்டு பெண்கள் பகுதியை அடைத்தார்கள். (இத்துனை அடைப்பு அவசியமா என்பது புரியாமலே போய்விட்டது).
ஜிஎன்
|
|
| (இணையுங்கள்)நமக்குள் இஸ்லாம் |
| Visit this group |