பரங்கிப்பேட்டையில் மீலாது சீரத்துன்னபி என்ற பெயரில் ஷாதி மஹாலில் மாநாடு நடைப் பெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் எம்.அப்துல் காதிர் மரைக்காயர் உம்ரி வழக்கம் போல தனது ஆதங்கத்தை கொட்டினார். பல ஆண்டுகள் படித்த நாமே வாய்மூடிக் கொண்டிருக்கும் போது இன்றைக்கு சின்னப் பிள்ளைகளெல்லாம் மஸாயில் பேசுகிறார்கள் என்றார். (மார்க்கத்தை தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் இந்த மாற்றம் ஆரோக்யமான மாற்றம் தான் என்பது ஏனோ சிலருக்கு விளங்குவதேயில்லை)
தொடர்ந்து பேசியவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை ஆங்காங்கே எடுத்துக் காட்டினர்.
நபிப்புகழ் என்ற பெயரில் "பஞ்சபூதங்களும் நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டன..." என்ற தோரணையில் பேச்சைத் துவங்கி, "இந்தத் தூதர் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார்.. என்ற - வசனத்தை எடுத்துக்காட்டி - வாதத்தை வைத்து, மெளலீது ஓதக்கூடாது என்று சொல்பவர்கள் முட்டாள்கள் என்று பத்வா கொடுத்து பேச்சை முடித்தார். சாலிஹ் நபியின் ஒட்டகமும், குகைவாசிகளின் நாயும் சொர்க்கத்துக்குப் போகும் என்று குர்ஆனில்? இருக்கின்றது என்றார்.(குர்ஆனில் எந்த வசனத்தில் இது கூறப்பட்டுள்ளது என்று சுன்னத்வல்ஜமாஅத்தோ, விழாகமிட்டினரோ எடுத்துக்காட்டினால் நன்றாக இருக்கும்)
தொடர்ந்து பேசிய "ஆன்மீகத் தந்தை"யும் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையை ஓரளவு புதுப்பித்தார்.
குணங்குடி மஸ்தானின் கற்பனைப் புராணமெல்லாம் நபிப்புகழ் என்றப் பெயரில் பாடப்பட்டது. தாஹா மதனி என்ற பெயருடன் புராணம் பாடபட்டதால் அவரை அணுகி "மதனி" என்பது தங்களுக்கு வீட்டில் வைத்தப் பெயரா.. அல்லது மதினாவின் பட்டமா என்று கேட்டோம். தரிக்காவில் கொடுக்கப்பட்ட பட்டம் என்று ஒரு போடு போட்டார். (மதினாவில் படித்து பட்டம் வாங்கி மதனிகள் ஜாக்கிரதை)
0 Responses So Far: